தற்போது நடைபெற்று வரும் அரச விசாரணை ஆணையத்தின் விசாரணைகள், பேங்க் நெகாராவில் நஷ்டம் குறித்து அல்ல என்றும் மகாதீர் குறிப்பிட்டிருக்கிறார்.
“இது நிதியை இழந்ததற்காக அல்ல. காரணம் பேங்க் நெகாரா அதிலிருந்து எப்போதோ மீண்டுவிட்டது. மீண்டதோடு மட்டுமல்ல, தற்போது அதன் சொத்து மதிப்பு பல பில்லியன் டாலர்கள் ஆகும்.”
“ஞாபகப்படுத்திப் பாருங்கள்.. பேங்க் நெகாரா 5 மில்லியன் ரிங்கிட் நிதியைக் கொண்டே தொடங்கப்பட்டது. தற்போது அது 100 பில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் உள்ளது. எனவே என்ன சொல்லப் போகிறீர்கள்? பேங்க் நெகாரா தோற்றுவிட்டது என்றா?” என்று மகாதீர் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Comments