கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு ஒரு பெண்ணுடன் அவர் குடிபோதையில் இலண்டனில் கார் ஓட்டியபோது அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் ஓட்டிய கார் காவல் துறையினரால் நிறுத்தப்பட்டு அவர் மீது போதை அளவுக்கான பரிசோதனை நடத்தப்பட்ட போது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக அவர் மதுபோதையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட ரூனி அதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.