கடந்த செப்டம்பர் 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில், பேராக் மாநிலத்தில் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனையில், 21 வயதான அந்நபர் உட்பட அம்மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மூவரும் மலேசியா, தாய்லாந்தில் உள்ள இஸ்லாம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தளங்களில் இத்தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.
ஒருவேளை, தாய்லாந்தில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வரமுடியாத பட்சத்தில், கத்தி மூலமாகத் தாக்குதல் நடத்தவும் அவர்கள் மூவரும் திட்டமிட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்திருக்கின்றது.