Home இந்தியா கொடுங்கையூர் சம்பவம்: பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம்!

கொடுங்கையூர் சம்பவம்: பலியான சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம்!

806
0
SHARE
Ad

highcourt_1970547fசென்னை – கொடுங்கையூரில் சில தினங்களுக்கு முன், சாலையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது.

அதனை அறியாமல் தண்ணீரை மிதித்த 7 வயதான இரு சிறுமிகள் மின்சாரம் தாக்கி மரணமடைந்தனர்.

தமிழகத்தை உலுக்கிய இச்சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அதிரடித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இறந்த இரு சிறுமிகளின் குடும்பத்திற்கும் தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.