Home இந்தியா கொலையாளி தஷ்வந்த் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோட்டம்!

கொலையாளி தஷ்வந்த் போலீஸ் பிடியிலிருந்து தப்பியோட்டம்!

688
0
SHARE
Ad

Dhasvanthசென்னை – போரூரில் சிறுமி ஹாசினியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், அண்மையில் பிணையில் வெளியே வந்தார்.

பின்னர், தனது தாயாருடன் தங்கியிருந்த் தஷ்வந்த், அவரையும் கொலை செய்துவிட்டு, 25 பவுன் நகைகளுடன் மும்பைக்குத் தப்பி ஓடினார்.

மும்பையில் 5 நாட்களாகத் தங்கியிருந்த தஷ்வந்தை மும்பைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மும்பை காவல்துறையினர் பிடியிருந்து தஷ்வந்த் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, தஷ்வந்தைக் கைது செய்ய தமிழகக் காவல்துறையினர் மும்பைக்கு விரைந்திருக்கின்றனர்.