சென்னை – பாடலாசிரியராக பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி விருதுகளைக் குவித்தவர் கவிஞர் பா.விஜய்.
இளைஞன் படத்தின் மூலமாக முதன் முதலாக நடிகனாக அவதாரம் எடுத்தார்.
இந்நிலையில், தனது புதிய திரைப்படத்தின் பெயரை நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறார் பா.விஜய்.
தனது புதிய படத்திற்கு ‘ஆருத்ரா’ எனப் பெயரிட்டிருக்கும் பா.விஜய், அதை தானே எழுதி, இயக்கியிருக்கிறார்.
Comments