இந்நிலையில், தான் அங்கு செல்லப் போவதில்லை என டிரம்ப் இன்று வெள்ளிக்கிழமை தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.
லண்டன் நகரத்தின் நடுவே வசதியாக இருந்த அமெரிக்கத் தூதரகக் கட்டிடத்தை, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா விற்றது மிக மோசமான முடிவு என டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.
“நான் லண்டன் பயணத்தை இரத்து செய்ததன் காரணம் என்னவென்றால், நான் ஒபாமா தலைமையிலான நிர்வாகத்தின் பெரிய ரசிகனெல்லாம் கிடையாது. குறிப்பாக, புதிய கட்டிடத்தை அதுவும் நகரத்திற்கு வெளியே கட்டுவதற்கு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்து, நகரத்தின் உள்ளே மிக வசதியாக இருந்த கட்டிடத்தை வெறும் “கடலைக்கு” விற்றிருக்கிறார். மோசமான ஒப்பந்தம். அதை நான் ரிப்பன் வெட்டித் திறக்க வேண்டுமா? முடியாது” என்று டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.