Home இந்தியா இத்தாலிய மாலுமிகள் வழக்கு : ஏப்ரல் முதல் வாரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை?

இத்தாலிய மாலுமிகள் வழக்கு : ஏப்ரல் முதல் வாரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை?

446
0
SHARE
Ad

Tamil_News_large_672496புதுடெல்லி, மார்ச் 26- இந்திய மீனவர்கள் 2 பேரை சுட்டுக்கொன்ற இத்தாலிய கப்பல் மாலுமிகள் மீது கொலை வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பு நீதிமன்றம் இயங்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க கேரள மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மட்டுமே இதற்கு அதிகாரம் என்று விளக்கம் அளித்துள்ளது.

#TamilSchoolmychoice

தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து மத்திய அரசு விரைவில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆலப்புழா அருகே கடலில் நின்று கொண்டிருந்த இத்தாலி வணிக கப்பலின் மாலுமிகள் சுட்டதில் இந்திய மீனவர்கள் 2 பேர் இறந்தனர்.