Home இந்தியா கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிப்பு

கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிப்பு

807
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் மாலை 7.20 நிலவரம்) தற்போது சிபிஐ-யின் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் கார்த்தி சிதம்பரத்திற்கு மேலும் 3 நாட்கள் தடுப்புக் காவல் நீட்டிப்பை பாட்டியாலா சிறப்பு சிபிஐ நீதிமன்றம் வழங்கியுள்ளது.

சிபிஐ சமர்ப்பித்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மேலும் 3 நாட்களுக்கு தடுப்புக் காவலை நீட்டித்தது.

கார்த்தி சிதம்பரம் மீண்டும் திங்கட்கிழமை நண்பகலில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவும் நீதிபதி உத்தரவிட்டார்.