Home உலகம் மியன்மார் அதிபர் பதவி விலகினார்!

மியன்மார் அதிபர் பதவி விலகினார்!

954
0
SHARE
Ad

யாங்கூன் – மியன்மார் நாட்டின் மக்கள் அதிபர் ஹிடின் கியாவ், ஓய்வு பெறும் நோக்கத்தில் தனது அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பதாக, அதிபர் அலுவலகம் இன்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது.

மேலும், அடுத்த 7 நாட்களில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் வரை, தற்போது இருக்கும் இரண்டு துணை அதிபர்களில் மூத்தவர், இடைக்கால அதிபராகப் பதவியேற்பார் என்றும் அதிபர் அலுவலகம் குறிப்பிட்டிருக்கிறது.

அதன் படி, இராணுவத்தால் நியமனம் செய்யப்பட்டிருக்கும் துணை அதிபரான மியிண்ட் சுவி, இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மியன்மாரைப் பொறுத்தவரையில் அதிபர் பதவி என்பது, அரசியலமைப்பின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பின்பற்றி நாட்டிற்கும், அரசாங்கத்திற்கும் தலைமை வகிப்பதாகும்.

எனினும், ஹிடின் கியாவின் பதவி சடங்கிற்காக மட்டும் இருந்து வந்தது. காரணம், கடந்த 2016-ம் ஆண்டு முதல் மியன்மார் நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சு கி செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.