இந்நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 15-ஆம் தேதி தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய தினமே மஇகா வேட்பாளர் பட்டியலும், மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளின் பட்டியலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், அதற்கேற்ப பொருத்தமான எதிரணி வேட்பாளர்களை நிறுத்தும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வியூகமாக இது பார்க்கப்படுகிறது.
எனினும் தேசிய முன்னணி, பக்காத்தான் ஆகிய இரு தரப்புகளிலும் இடையிடையே சில வேட்பாளர்களின் நியமனங்கள் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஏப்ரல் 28-ஆம் தேதியாகும்.