Home தேர்தல்-14 அனைவரும் விடுமுறையில்! பிரதமராகப் பதவியேற்கிறார் மகாதீர்!

அனைவரும் விடுமுறையில்! பிரதமராகப் பதவியேற்கிறார் மகாதீர்!

900
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (காலை 10.15 மணி நிலவரம்) துன் மகாதீர் தலைமையேற்ற பக்காத்தான் கூட்டணி மத்திய அரசாங்கத்தை அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியதன் விளைவாக, அவர் அறிவித்தபடி இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் (மே 10 & 11) அரசாங்கப் பொதுவிடுமுறைகளாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலையில் அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் “நான் இன்னும் பிரதமராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால், அரசாங்கத் தலைமைச் செயலாளர்தான் அந்த 2 நாட்கள் விடுமுறையை அறிவிக்க வேண்டும்” என்று மகாதீர் கூறியிருந்தார்.

“அனைவரும் விடுமுறையில் இருப்பர். ஆனால் இந்தத் தேர்தலில் வென்றவர்களுக்கு மட்டும் விடுமுறை இல்லை” என்றும் மகாதீர் கிண்டலாகக் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் மகாதீர் பிரதமராகப் பதவியேற்பார் என அறிவிப்புகள் வெளியாகி இருந்தாலும், இதுவரையில் (காலை 10.15) மணி வரை மகாதீர் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரண்மனையை வந்தடையவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.