கோலாலம்பூர் – கடந்த மே 16-ஆம் தேதி விடுதலையான பின்னர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து கூட்டங்களில் உரையாற்றுவதோடு, ஆதரவாளர்களையும் சந்தித்து வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மாநில சுல்தான்களையும் மரியாதை நிமித்தம் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை (மே 29) பகாங் மாநில இளவரசர் தெங்கு அப்துல்லாவை கோலாலம்பூரில் அன்வார் இப்ராகிம் சந்தித்தார்.