ஜப்பான் ஆசியா கண்டத்தில் வலுவான காற்பந்து குழுவைக் கொண்ட நாடாகும். கொலம்பியாவோ தென் அமெரிக்க காற்பந்து விளையாட்டு பாணியையும், சிறந்த விளையாட்டாளர்களையும் கொண்ட நாடாகும்.




ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் கொலம்பிய ஆட்டக்காரர் கார்லோஸ் சாஞ்செஸ் பினால்டி வட்டத்திற்குள் தனது கையால் பந்தைத் தடுத்ததற்காக சிவப்பு அட்டை வழங்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நடுவரால் வெளியேற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கு வழங்கப்பட்ட பினால்டி வாய்ப்பை அதன் விளையாட்டாளர் ககாவா கோலாக்க, ஜப்பான் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்து வந்தது.
முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற நிலையில் முடிவடைந்தது.
இரண்டாவது பாதி ஆட்டம் முடிவடைந்த நிலையில் 10 விளையாட்டாளர்களுடன் விளையாடிய கொலம்பியா கோல் ஏதும் அடிக்க முடியாமல் தடுமாறி நிற்க, ஜப்பான் 2-1 கோல் எண்ணிக்கையில் வெற்றி வாகை சூடியது.