நேற்று மலேசிய நேரப்படி அதிகாலை 2.00 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது.
முதல் பாதியில் இரு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காமல் விளையாடின. ஸ்பெயினின் ஒரே கோலை டியகோ கோஸ்தா 54-வது நிமிடத்தில் அடித்து தனது நாட்டை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.
‘பி’ பிரிவுக்கான இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அடுத்த சுற்றுக்கு ஸ்பெயின் செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே போர்ச்சுகலுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 3-3 என்ற கோல்களில் ஸ்பெயின் சமநிலை கண்டது.
எதிர்வரும் ஜூன் 25-ஆம் தேதி இதே ‘பி’ பிரிவுக்கான மற்றொரு சுற்று ஆட்டங்களில் ஸ்பெயின் மொரோக்கோவையும் ஈரான், போர்ச்சுகலையும் சந்திக்கும்.
Comments