பிணை கோரி கருணாஸ் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி, அடுத்த 30 நாட்களுக்கு தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு அவரை விடுதலை செய்தார்.
மற்றொரு வழக்கிலும் கருணாசின் பிணை மனுவை விசாரித்த நீதிபதிஅந்த வழக்கிற்காக கருணாஸ் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அடுத்த 30 நாட்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு வந்து கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.
இந்த நிபந்தனைகளுடன் நேற்று கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.