

“இந்தப் பள்ளிக்குள் நுழைந்து காந்தி மண்டபத்தில் மகாத்மாவின் உருவச் சிலையைக் கண்டதும் என்னுடைய மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. மலேசியாவில் வாழும் நீங்கள் காந்தியை மிகவும் மதிப்பதும் அவருடைய பெயரில் பள்ளியை நடத்துவதும் கண்டு நான் பெருமைப்படுகிறேன். இந்தப் பள்ளியின் வளர்ச்சியும் முன்னேற்றங்களும் எனக்குத் தெரிவிக்கப்பட்டன. உண்மையிலேயே இந்தப் பள்ளி மிகவும் சிறந்த ஒரு பள்ளியாக இருக்கிறது. அதனால், இங்கே படிக்கும் குழந்தைகளுக்கு இந்தியத் தூதரகம் உதவிகள் செய்வது முக்கியம் எனக் கருதுகிறேன். எனவே, பள்ளி நூலகத்தை மேம்படுத்தி அங்கு மாணவர்களுக்காக நிறைய நூல்களை இந்தியாவிலிருந்து தருவித்து வழங்க முடியும். பள்ளி ஆசிரியர்களை இந்தியாவுக்கு அனுப்பி கற்பித்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்க ஆவன செய்யப்படும். மேலும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஒரு தகவல் தொழில்நுட்ப அறை அமைத்துக் கொடுக்க இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுக்கும்” என அவர் தமதுரையில் மேலும் குறிப்பிட்டார்.