
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்து சாஹிட் விசாரணை கோரினார். 65 வயதான சாஹிட்டுக்கு 2 மில்லியன் பிணைத் தொகை நிர்ணயித்த நீதிமன்றம், அவரது அனைத்துலகக் கடப்பிதழையும் வழக்கு முடியும் வரை முடக்கி வைத்தது.இன்றைக்குள் 1 மில்லியன் பிணைத் தொகையை செலுத்த வேண்டும் என்றும், எஞ்சிய 1 மில்லியன் தொகையை எதிர்வரும் அக்டோபர் 26-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான சாஹிட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு டிசம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.