இதனைத் தொடர்ந்து சமூக ஊடக வாசிகள் சிவகுமாரைக் கடுமையாகச் சாடி பல்வேறு கருத்துகளை இணையத் தளங்களில் வெளியிட்டனர். சிவகுமாரின் செயலைக் கண்டிக்கும் வண்ணம் அந்த கருத்துகள் அமைந்திருக்கின்றன.
இந்தக் கண்டனங்களைத் தொடர்ந்து சிவகுமார் காணொளி ஒன்றின் வழி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து நடிகர் சிவகுமார் சார்பில் புதிய செல்பேசி ஒன்று அந்த மாணவனுக்கு வழங்கப்பட்டது; இதற்காக சமூக வலைத்தளவாசிகளுக்கு அந்த மாணவர் ராகுல் நன்றி கூறியுள்ளார்.