“இயக்குநர் பாக்கியராஜ் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், முருகதாசிடம் நான் கெஞ்சியும் உடன்படாததால், வழியே இல்லாமல் சன் பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தின் மிகப் பெரிய படமான சர்கார் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்” எனக் கூறியிருக்கிறார்.
அதற்கு முக்கியக் காரணம், தான் தேர்தலில் வெற்றி பெறாமல் வந்ததுதான் என பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். எனவே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் தனது அறிக்கையை வாசித்துவிட்டு சென்றார்.
தன்னைப் போல் நியமனம் மூலம் பதவிக்கு வந்த சங்கப் பொறுப்பாளர்களும் அந்தப் பதவிகளில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் எனவும் பாக்கியராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரது பதவி விலகல் கடிதத்தைத் தொடர்ந்து பாக்கியராஜுக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் எழுதியுள்ள பதில் கடிதத்தில் தங்களின் பதவி விலகலை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் நீங்களே தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.