முன்னதாக சீ பீல்ட் ஆலய நிலத்தினை வாங்குவதற்காக மக்கள் நிதி நன்கொடை திட்டமொன்றையும் அறிமுகம் செய்து, அதற்காக வின்சென்ட் முதல் பங்களிப்பாக 500,000 ரிங்கிட் தந்தார். பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தப்போது தற்பொழுது 2 மில்லியன் ரிங்கிட் வரையிலும் நன்கொடை திரட்டப்பட்டுள்ளதை அறிவித்தார்.
மேலும், பேசிய அவர் தற்பொழுது ஆலயம் நிலைக் கொண்டுள்ள நிலத்தின் உரிமையாளரை தமக்கு நன்கு தெரியும் எனவும், அவர் பொதுநலத்தின் மீது அதிகம் அக்கறை உள்ளவர் எனவும் கூறினார். ஆகவே, அந்நிறுவனம் ஆலய நிலத்திற்கு ஒரு சிறந்த விலையை நிர்ணயித்து உதவி புரியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.