Home நாடு அமார் சிங்: 1எம்டிபி விசாரணை பெரும் சவாலாக அமைந்தது

அமார் சிங்: 1எம்டிபி விசாரணை பெரும் சவாலாக அமைந்தது

1916
0
SHARE
Ad
அமார் சிங் – கோப்புப் படம்

கோலாலம்பூர்: புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வு துறையின் இயக்குனராக ஓய்வு பெற்ற அமார் சிங், 1எம்டிபி குறித்த விசாரணை தமது வாழ்க்கையின் மிகப்பெரிய சவாலாகவும் நினைவாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.

இப்பிரிவில் பணியாற்றிய முதல் பஞ்சாப் இனத்தவர் என்ற பெருமையை அமார் சிங் பெறுகிறார். இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அவர் மீண்டும் காவல் துறையில் பணியாற்ற விரும்புவதாக இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் ஜூன் 6-ம் தேதி பணியிலிருந்து ஓய்வெடுக்க இருந்த நிலையில், அவருக்கான பணிக்காலம் மேலும் ஆறு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

1எம்டிபி விசாரணையின் போது, இவரது புகைப்படம் தாங்கிய செய்திகள் அன்றாடம் இணையத்தளச் செய்திகள் மற்றும் நாளிதழ்களில் இடம்பெற்றதை மக்களும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.