இத்திட்டத்தினை நன்கு ஆராய்ந்து கண்காணித்த பின்பே, மேலும் இதனை விரிவுபடுத்துவதற்கான செயல்முறைகள் எடுக்கப்படும் என தியோ கூறினார்.
படிவம் ஒன்று முதல் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு ஊடாடும் (Interactive) புத்தகங்கள் 2020-ல் கிடைக்கப்பெறும் எனக் கூறிய அவர், வகுப்பறைக்கு அப்பால் உள்ள அறிவினைப் பெறுவதற்கு இம்முறை உதவியாக இருக்கும் என்றார்.
பல காலமாக புத்தகப்பை சுமை குறித்த புலம்பல்கள் மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஒரு பிரச்சனையாக இருந்ததை நினைவுப்படுத்தி, தற்போது இத்திட்டத்தின் வழி சுமுகமான தீர்வைக் காண இயலும் என்றார் தியோ.