Home உலகம் சிங்கப்பூர் வலைத்தள ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூர் வலைத்தள ஆசிரியர் மீது குற்றச்சாட்டு!

739
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலுள்ள வலைத்தள ஆசிரியர் டெரி சூ மீது நேற்று வியாழக்கிழமை அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்நாட்டுத் தலைவர்கள் மத்தியில் ஊழல் உள்ளதாக குறிப்பிடப்படும் பதிவொன்றை அந்த ஆசிரியர் அவரது வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்ததற்காக அவர் மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக சிங்கப்பூர் பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதால் பலரால் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

டெரி சூ தனது சொந்த வலைத்தளமான தி ஆன்லைன் சிட்டிசன்” பக்கத்தில், சிங்கப்பூர் அரசாங்கத்தில்மிக உயர்ந்த அடுக்கில் ஊழல்எனும் பதிவினை வெளியிட்டு இக்குற்றச்சாட்டிற்கு உள்ளானார்.

#TamilSchoolmychoice

காவல் துறையினர் சூவின் இருப்பிடத்திற்குச் சென்று அவரது கணினிகள் மற்றும் இதர சாதனங்களைக் கைப்பற்றினர்.

அந்த வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது மீண்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சூவிற்கு இரண்டு ஆண்டுகள் அதிகபட்ச சிறைத் தண்டனையும் அல்லது அபராதமும், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.