சாய்னா மற்றும் காஷ்யப் குடும்ப உறவினர்கள் உட்பட சுமார் 40 விருந்தினர்கள் இத்திருமண விழாவில் கலந்து கொண்டனர். மிகவும் எளிமையாக முறையில் இவர்களது திருமணம் நடந்ததாகவும், வருகிற டிசம்பர் 16-ம் தேதி விருந்துபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சாய்னாவின் தந்தை, ஹர்வீர் சிங் தெரிவித்தார்.
இவர்களின் திருமணப் புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் #justmarried எனும் ஹேஷ்டேக் வாயிலாக சாய்னா பகிர்ந்துள்ளார்.
சாய்னா ஆண்டு தொடக்கத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற இந்தோனிசியா மாஸ்டர்ஸ் பூப்பந்து விளையாட்டில் இறுதிச் சுற்று வரை சென்றதோடு, பின்னர், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.