கடந்த சனிக்கிழமை, வால்பாறையில் 3.5 பாகை செல்சியஸும், கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் 7.3, 7.4 பாகை செல்சியஸும் குளிர் பதிவானது. மேலும், இப்பகுதிகளில், உறைபனி நிலவிதாக வானிலை மையம் கூறியது.
இது குறித்து, தமிழகத்தின் வெதர்மேன் பிரதீப் ஜான் கடந்த ஜனவரி 5-ஆம் தேதி, தமிழகத்தில் நிலவும் கடும் பனி மற்றும் குளிர் காலம் பொங்கல் வரையிலும் நீடிக்கலாம் என்று தனது பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Comments