அதே வழக்கில் நேற்று, தனியார் நிறுவனத்தின் தலைமை நிருவாக அதிகாரியான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நீதிபதி இர்சா சுலாய்கா ரொஹானுடின் முன்னிலையில், இன்று புத்ராஜெயாவில், அந்த உத்தரவு வழங்கப்பட்டது .
நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5:50 மணியளவில், ஊழல் தடுப்பு ஆணையம், 64 வயதான முன்னாள் அரசாங்க நிறுவனத் தலைவரையும், அதற்கு முன்னதாக மாலை 5:20 மணியளவில், 32 வயது பெண் தலைமை நிருவாக அதிகாரி ஒருவரையும் கைது செய்ததாக அறிவிக்கப்பட்டது.
2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், பதவியில் இருந்துக் கொண்டு, அரசு ஊழியருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டதற்காக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.