அவ்வமைப்பின் துணைத்தலைவர் ஹாபிக் ஷாபி கூறுகையில், தற்போது, கடன் வாங்கியவர்கள், கடனை வருமானத்தில் இருந்து நேரடியாக செலுத்தும் போது, முன்னர் இருந்த 10 விழுக்காடு தள்ளுபடி சேவையை அனுபவிக்க இயலாமல் போவதோடு, கடனை முழுமையாக செலுத்துவோருக்கு 20 விழுக்காடு தள்ளுபடி தரப்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.
“இம்மாதிரியான முயற்சிகளை, தக்க காரணமற்ற நிலையில் உடனடியாக நிறுத்தியது வேதனையளிக்கிறது”, என அவர் கூறினார்.
முன்னதாக, மஹாசிஸ்வாநேஷனால் அமைப்பிலிருந்து, மூன்று பிரதிநிதிகள், பிடிபிடிஎன் தலைமை நிருவாகி வான் அகமட் வான் யூசோபிடம், இது குறித்த மனு ஒன்றை ஒப்படைத்தனர்.