Home உலகம் மெக்சிகோ: எரிபொருள் குழாய் வெடிப்பில், பலி எண்ணிக்கை 109-ஆக உயர்வு!

மெக்சிகோ: எரிபொருள் குழாய் வெடிப்பில், பலி எண்ணிக்கை 109-ஆக உயர்வு!

720
0
SHARE
Ad

மெக்சிகோகடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 18) மெக்சிகோவில் உள்ள ஹிடால்கோ மாநிலத்தில் எரிபொருள் குழாய் வெடித்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 உயர்ந்துள்ளது.  மேலும், 40 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

சம்பவம் நடந்த அன்று, ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை, 600-கும் மேற்பட்ட பொதுமக்கள் வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர் என்றும், எதிர்பாராத விதமாக திடீரென எரிபொருள் குழாய் வெடித்து தீப்பிடித்ததில் ஏராளமானோர் கருகி மாண்டனர் எனவும், மாநில அரசு தெரிவித்தது.

மெக்சிகோவில், மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறதுஅங்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று எரிபொருளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுஇதன், காரணமாக, பெட்ரோல் திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இறந்தவர்களின் அடையாளத்தைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால், மெக்சிகோ அரசாங்கம், அனைத்துலக  நிபுணர்களின் உதவியைப் பெறும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக மெக்சிக்கோ அரசு தெரிவித்தது.