Home நாடு “உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, மக்களின் நம்பிக்கையை இழக்காதீர்” – டாயிம்

“உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, மக்களின் நம்பிக்கையை இழக்காதீர்” – டாயிம்

1404
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சில அமைச்சரவை அமைச்சர்கள், வெளிப்படையாக மக்கள் கவனிக்கும் அளவிற்கு சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்குமாறு அரசாங்க ஆலோசனைக் குழுவின் தலைவரான துன் டாயிம் சாய்னுடின் அறிவுரைக் கூறியுள்ளார்.

இதே சூழல் தொடர்ந்தால் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து விடுவர் என அவர் எச்சரித்தார். 

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் புதியவர்கள் என்ற எண்ணம் இருந்தாலும், வெளிப்படையாக இப்படி நடந்து கொள்வது, இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை உணர்வைக் கேள்விக்குட்படுத்திவிடும் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

எனவே, அமைச்சர்கள்அவர்களின் அமைச்சுகளில் உள்ள பிரச்சனைகளையும், நல்ல திறன்களை வெளிப்படுத்தவும் முனைப்புக் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.