Home நாடு பள்ளிகள் தங்கள் பிரச்சனைகளை பிபிடி, ஜெபிஎனிடம் தெரிவிக்க வேண்டும்!

பள்ளிகள் தங்கள் பிரச்சனைகளை பிபிடி, ஜெபிஎனிடம் தெரிவிக்க வேண்டும்!

652
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பள்ளிகளில் ஏற்படக் கூடிய ஒவ்வொரு பிரச்சனைகளையும் கூடிய விரையில் தீர்வுக்காண, சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவகங்களிலும், மாநில கல்வித் துறைகளிலும் , தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க வேண்டும் எனக் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் கூறினார்.

கல்வி அமைச்சுக்கு அப்பள்ளிகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த தகவல்கள் பெறப்படாத நிலையில், அவற்றை தீர்வுக் காண்பதற்கு கடினமாக இருக்கும் என அவர் கூறினார்.   

இதுவரையிலும், அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பள்ளிகளின் பிரச்சனைகளை கல்வி அமைச்சு நிறைவேற்றி வைத்துள்ளதாகவும், மேலும் சில பள்ளிகளின் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் அவர் கூறினார்.