நாளை வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் சந்திப்புக் கூட்டத்திற்கு முன்பதாக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
முன்னதாக, அம்னோ கட்சி உறுப்பினர்கள் மற்றும் தேசிய முன்னணி தலைமைச் செயலாளரான, நஸ்ரி அஜிஸின் இனவாத உணர்வு அடிப்படையிலான கருத்துகளைக் குறித்து, அம்னோ கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் அமைதிக் காத்து வந்தது, மஇகா மற்றும் மசீச கட்சிகளுக்கு இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, அக்கூட்டணியை விட்டு விலக முடிவு எடுத்திருப்பதாக அவை கூட்டு அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்திருந்தன.