Home நாடு ரந்தாவ் வரலாறு படைக்கிறது – 4 மணி வரை 74 விழுக்காடு வாக்களிப்பு

ரந்தாவ் வரலாறு படைக்கிறது – 4 மணி வரை 74 விழுக்காடு வாக்களிப்பு

813
0
SHARE
Ad

ரந்தாவ்: மலேசிய இடைத் தேர்தல்கள் வரிசையில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி. இன்று பிற்பகல் 4.00 மணிவரை ஏறத்தாழ 74 விழுக்காடு வாக்காளர்கள் இன்று வாக்களித்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற செமினி இடைத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த விழுக்காடு வாக்குகளை விட இது அதிகமாகும். செமினி இடைத் தேர்தலில் 73 விழுக்காடு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தினர்.

மாலை 5.30 மணியோடு வாக்களிப்பு நிறைவடையும்போது, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

மாலை 5.30 அளவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், சுமார் 76 விழுக்காட்டினர் வாக்களிப்பர் என தாம் நம்புவதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு 14 மையங்களில் தொடங்கியது. 53 வாக்களிப்பு வரிசைகள் இன்று காலை முதல் செயல்பட்டன.

20,793 மொத்த வாக்காளர்களைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியின் 11 வாக்காளர்கள் ஏற்கனவே, அஞ்சல் மூலம் வாக்களித்து விட்டனர். 110 முன்கூட்டியே வாக்களிப்பவர்களில் 96 விழுக்காட்டினர் கடந்த செவ்வாய்க்கிழமையே தங்களின் வாக்குகளைச் செலுத்தி விட்டனர்.

தேசிய முன்னணி சார்பில் அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிடஅவரை எதிர்த்து நம்பிக்கைக் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சியின் டாக்டர் எஸ்.ஸ்ரீராம் களமிறங்கி இருக்கிறார்இவர்களைத் தவிர ஆர்.மலர் என்ற இந்தியப் பெண்மணியும்முகமட் நோர் ஹசான் என்பவரும் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனர்.