Home நாடு 1எம்டிபி வழக்கு விசாரணை நவம்பர், ஜனவரி மாதம் தொடங்கும்!

1எம்டிபி வழக்கு விசாரணை நவம்பர், ஜனவரி மாதம் தொடங்கும்!

682
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி கணக்கினை மாற்றியமைத்தக் காரணத்திற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் 1எம்டிபி நிறுவனத் தலைவர் அருல் கண்டா மீது அடுத்த நவம்பர் மற்றும் ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்படும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 29-ஆம் தேதி வரையிலும் இந்த வழக்கு நடைபெறும் எனவும், பிறகு மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதியிலிருந்து ஜனவரி 17-ஆம் தேதி வரையிலும் விசாரணைத் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி முகமட் சாய்னி மஸ்லான் இந்த உத்தரவினை விடுத்தார். இந்த வழக்கினை முன்னாள் பிரதமரும், அருல் கண்டாவும் ஒன்றாகவே எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.    

#TamilSchoolmychoice

அரசாங்க துணை வழக்கறிஞர் ராயா பாட்னின் யூசோப் கூறுகையில், இந்த வழக்குத் தொடர்பாக சுமார் 25-லிருந்து 30 சாட்சிகளை நீதி மன்றம் அழைக்க இருப்பதாகக் குறிப்பிட்டார்.