பெட்டாலிங் ஜெயா, தாமான் மேகாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்ற பௌத்த சிறப்பு விருந்தோம்பல் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட அமைச்சரிடம் சம்பந்தப்பட்டவர்கள் இது குறித்துத் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
“ஆனாலும், ஒரு வெளிநாட்டு பௌத்தத் துறவி தன்னிடம் எந்த பணமும் இல்லை என்பதற்காக எல்லையிலேயே இருநாட்கள் தடுத்து வைக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடைபெற்றிருக்கக் கூடாது. காரணம், பௌத்தத் துறவியர் வாழ்க்கையைத் துறந்தவர்கள் என்பதால் அவர்கள் பெரும்பாலும் கையில் பணத்தைக் கொண்டிருப்பதில்லை. பொதுவாக வட்டார பௌத்த அமைப்புகளின் உதவியுடன் செயல்படுவது அவர்களது வழக்கம்” என்றும் வேதமூர்த்தி தனதுரையில் குறிப்பிட்டார்.