Home நாடு மஸ்ஜிட் இந்தியாவில் 30 கடைகள் தீக்கு இரையாயின!

மஸ்ஜிட் இந்தியாவில் 30 கடைகள் தீக்கு இரையாயின!

618
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்னும் இரண்டு வாரங்களில் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட இருக்கும் வேளையில், மஸ்ஜிட் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள 30 வர்த்தகர்களின் நிலைக் கேள்விக்குறியாகி போனது. இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 கடைகள் தீக்கு இரையாயின.

இந்த சம்பவம் குறித்து அவசர அழைப்பு கிடைக்கப்பட்டதும் நள்ளிரவு 1:45-க்குள் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு அரிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை அடைந்ததாக அதன் செயற்பாட்டுத் தலைவர் எல். லோகேஸ்வரன் கூறினார்.

செந்துல், ஹாங் துவா மற்றும் திதிவாங்சாஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

துணிகள், பைகள் மற்றும் காலணிகளை விற்பனை செய்த 30 கடைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டனஎன அவர் குறிப்பிட்டார். 

தீக்கான காரணம் மற்றும் இழப்புகள் குறித்து ஆராய்ந்து வரப்படுகிறது என அவர் கூறினார்.