Home நாடு பாஸ்டர் ரெய்மெண்ட், அமிர் சே மாட் விவகாரம்: சிறப்பு குழு அமைக்கப்படும்!- மொகிதின்

பாஸ்டர் ரெய்மெண்ட், அமிர் சே மாட் விவகாரம்: சிறப்பு குழு அமைக்கப்படும்!- மொகிதின்

617
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணமல் போன விவகாரம் குறித்து உள்துறை அமைச்சு தீவிரம் காட்டி வருவதாகவும், இது குறித்து விசாரிக்க அமைச்சு சிறப்புக் குழு ஒன்றினை அமைக்கும், எனவும் உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறினார்.

மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) வெளிப்படுத்திய இந்த விவகாரமானது கவனிக்கப்பட வேண்டியது என்பதை கண்டறிந்த பிறகு, இந்த குழு அமைக்க முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அண்மையில், வெளிப்படையாக பொது மக்களின் பார்வைக்கு கொண்டு சென்ற இந்த கருத்தினால், காவல் துறையினரை மோசமாக சித்தரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த சம்பவம் நடந்த போதுமுந்தைய காவல் துறைத் தலைவரான டான்ஶ்ரீ முகமட் புசி ஹாருன் காவல் துறை சிறப்பு பிரிவுக்கான தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கதுபாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போனதற்கு காவல் துறை சிறப்பு பிரிவுதான் காரணம் என சுஹாகாம் கருத்துத் தெரிவித்திருந்தது

2017 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளில் இவ்விரண்டு நபர்களும் காணாமல் போன நேரத்தில் காவல் துறை சிறப்பு பிரிவு மேலாளராக முகமட் புசி இருந்துள்ளார்வருகிற மே 4-ஆம் தேதி அன்று இவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.