தற்போது, ராகுல், கட்சித் தலைவர் பதவியை விட்டுத் தரப்போவதில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர் கட்சிக்கு கால அவகாசம் கொடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.
ராகுலின் இந்த முடிவுக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது மாற்றத்துக்கான நேரம் என்பதை இருவரும் உணர்ந்திருப்பதாக தெரிகிறது.