இந்த வழக்கு தொடர்பில் டோமி தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
“அவர் அரசாங்க தலைமை வழக்கறிஞர். என்ன செய்தாலும், அதில் ஒரு காரணம் இருக்கும். மேலும், அவர் அமைச்சை பிரதிநிதிப்பதிலிருந்து மட்டுமே விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஆனால், ஷாஸ்லின் அடிப்பின் குடும்பத்தை பிரதிநிதிப்பதிலிருந்தும் விலகிக் கொண்டுள்ளார்” என்று பிரதமர் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை, அடிப்பின் வழக்கிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக ஷாஸ்லின் எந்த ஒரு கருத்தினையும் முன்வைக்காமல் குறிப்பிட்டிருந்தார்.