Home கலை உலகம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: “நீதியும், உண்மையும் வெல்லும்!”- விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்: “நீதியும், உண்மையும் வெல்லும்!”- விஷால்

833
0
SHARE
Ad

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற இருந்த வேளையில், நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைக்க தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த விஷால், நீதியும் நியாயமும் கண்டிப்பாக வெல்லும் எனவும், உண்மை வெளிப்படும் என்றும் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பல்வேறு எதிர்ப்பு கருத்துகளும் சார்ந்த கருத்துகளையும் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை பாண்டவர் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை பேசி வந்த நிலையில், அதற்கு பிறகு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

வருகிற இந்த நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும்கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகிறதுஇதற்கான பிரச்சாரத்தில் இரு தரப்பும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதியான பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இத்தேர்தலை நடத்துகிறார்கூடிய விரையில் இத்தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.