கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 23-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்டமான யோகா தினக் கொண்டாட்டத்தில் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து சிறப்பித்ததோடு, அனைவரும் ஒன்றிணைந்து யோகா பயிற்சியிலும் ஈடுபட்டனர்.
மலேசியாவுக்கான இந்தியத் தூதர் மிருதுள் குமார் இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார். இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரிகளும், பத்துமலை ஆலய நிர்வாகத்தினரும், கோபியோ இயக்கத்தின் பொறுப்பாளர்களும், பல்வேறு அரசு சாரா இயக்கப் பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.
கோலாலம்பூர் இந்தியக் கலாச்சார மையத்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் யோகாவின் சில வழிமுறைகளையும், பயிற்சிகளையும் செய்து காட்டினார். யோகா மாணவர்கள் சில யோகா பயிற்சிகளையும் செய்து காட்டினர்.
சிறந்த யோகா மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.