
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தேர்தல்களின் ஒரு பகுதியாக கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தொகுதிகளுக்கான தேர்தல்கள் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்றன. சில தொகுதிகளில் முக்கியத் தலைவர்கள் தோல்வி கண்டுள்ளனர்.
பத்து தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தலைவர் பதவிக்கான போட்டியில் தோல்வி கண்டார்.
புக்கிட் பிந்தாங் தொகுதியில் கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் செயலாளரும் வழக்கறிஞருமான சிவமலர் தலைவராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தோல்வி கண்டார்.