Home நாடு ஹசிக், பார்ஹாஷ் காவல் துறை பிணையில் விடுவிப்பு!

ஹசிக், பார்ஹாஷ் காவல் துறை பிணையில் விடுவிப்பு!

951
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடோர் மற்றும் சாந்துபோங் தொகுதி முன்னாள் பிகேஆர் கட்சி இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் ஹஸீஸ் ஆகியோர்இன்று செவ்வாய்க்கிழமை காவல் துறையினரின் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான தடுப்புக் காவல் இன்றுடன் நிறைவடையும் வேளையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஹசிக் கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலிக்கு சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பாக பார்ஹாஷ் இரண்டு நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, அன்வாரின் அரசியல் செயலாளர் காவல் நிலையத்தை விட்டு வெளியேரும் போது, அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ‘ரிபோர்மாசி’ என்று முழக்கமிட்டு வரவேற்றனர்.