Home நாடு “லியூ தனது குற்றச்சாட்டை விவரிக்க வேண்டும்!”- டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

“லியூ தனது குற்றச்சாட்டை விவரிக்க வேண்டும்!”- டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

903
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஆடம்பர கடிகாரத்தைப் பெற்றதாகக் கூறப்படும் அமைச்சரின் அரசியல் செயலாளருக்கு எதிரான வழக்கு தொடர்பான தனது கருத்தை தெளிவுபடுத்த சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் லியூ வுய் கியோங்கிற்கு மேலவைத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.. விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலவையைத் தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டு காரணமாக லியூவை உரிமைகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் குழுவிடம் பரிந்துரைக்கும் தீர்மானத்தை தேசிய முன்னணி செனட்டர் டி லியான் கெர் கொண்டு வந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மக்களவைப் போல, மேலவைக்கு அத்தகைய ஏற்பாடு இல்லை என்று விக்னேஸ்வரன் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆயினும், மின்னணு ஊடக அறிக்கையில் நான் படித்தது போல, இது ஒரு தனித்துவமானதல்ல என்பதை தெளிவுபடுத்துவதற்கு நாம் அமைச்சருக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். அதனால்தான்,  அமைச்சரிடம் விளக்கம் பெற மேலவைச் செயலாளரிடம் விளக்கம் கேட்கக் கூறியுள்ளேன்.” என்று அவர் கூறினார்.

ஆடம்பர கடிகாரத்தை வாங்கியதாக லியூ கூறியதை அடுத்து, ஊழல் தடுப்பு ஆணையம் அண்மையில் சம்பந்தப்பட்ட அரசியல் செயலாளரை விடுவித்தது. இது குறித்து லியூ விளக்கமளிக்க வேண்டும் என்று டி கூறியிருந்தார். எவ்வாறாயினும், அந்த அதிகாரி ஒரு கடிகாரத்தை வாங்கியதாக தாம் கூறியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை லியூ மறுத்தார்.