யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்கான 5 பாடங்களுக்குமான இந்த நூல்களை வி ஷைன் நிறுவனம் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாகத் தயாரித்திருக்கிறது.


நூல்களை தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களிடையே உரையாற்றிய சுரேஷ் குமார் “அன்வார் இப்ராகிம் தமிழ், சீன மொழிவாரிப் பள்ளிகள் நாட்டில் நிலைத்திருக்க எப்போதும் குரல் கொடுத்து வந்திருப்பவர். தனது போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் மாணவர்கள் இந்த ஆண்டு சிறந்த முறையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், அக்கறையோடும் அனைத்து மாணவர்களுக்கும் தனது சொந்த செலவில் இலவசமாகவே இந்த நூல்களை வழங்கியிருக்கிறார்” என்று கூறினார்.


யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்ச்சியடைய இந்த நூல்கள் மிகவும் பயன்படும் என்றும் கருதுவதாகவும் கூறிய சுரேஷ் குமார் அனைத்து மாணவர்களும் சிறந்த முறையில் தேர்ச்சியடைய அன்வார் இப்ராகிம் சார்பில் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் போர்ட்டிக்சன் நகராண்மைக் கழக உறுப்பினரும் போர்ட்டிக்சன் தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க செயலவை உறுப்பினருமான விஜயஜோதியும் உரையாற்றினார்.


நிகழ்ச்சியின் இறுதியில் வி ஷைன் நிறுவன நூல்களின் பதிப்பாசிரியர் சா.விக்னேஸ்வரி நூல்கள் குறித்தும், மாணவர்கள் யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காகக் கடைப்பிடிக்க வேண்டிய முயற்சிகள், நுணுக்கங்கள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கினார்.

