Home One Line P1 யூபிஎஸ்ஆர் தேர்வு அகற்றப்படுமா? பெற்றோர், கல்வி அமைப்புகள் எதிர்ப்பு!

யூபிஎஸ்ஆர் தேர்வு அகற்றப்படுமா? பெற்றோர், கல்வி அமைப்புகள் எதிர்ப்பு!

551
0
SHARE
Ad

கோலாலம்பூர்: யுபிஎஸ்ஆர் தேர்வை இரத்து செய்வதற்கான என்யூடிபியின் பரிந்துரையை பெற்றோர்களும், அது சம்பந்தப்பட்ட அமைப்புகளும் நிராகரித்துள்ளன. 

மலாக்கா மாநில பெற்றோருக்கான கல்வி அதிரடி குழு (மெக்பை) தலைவர் மாக் சீ கின் கூறுகையில், யுபிஎஸ்ஆர் தேர்வினை அகற்றுவதன் நோக்கம்,   படிவம் மூன்று மதிப்பீடு தேர்வான (பிடி3) போன்ற மையப்படுத்தப்பட்ட சோதனையை மேற்கொள்வது என்று அர்த்தப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

யுபிஎஸ்ஆர் அகற்றப்பட வேண்டும், ஆயினும், அது உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பதை அவர் மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

ஆசிரியர்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு அனைத்து விளையாட்டு, உடல் மற்றும் பாடத்திட்ட நடவடிக்கைகள், வகுப்பறை மதிப்பீடு மற்றும் சைக்கோமெட்ரிக் மதிப்பீடு ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் பெற்றோர்கள் அதனை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று மாக் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, என்யூடிபி பொதுச் செயலாளர் ஹாரி டான் ஹுவாட் ஹோக், ஆரம்ப பள்ளி நிலை மதிப்பீட்டு சோதனையை அகற்றுவதால் மாணவர்களின் சுமையை குறைக்க முடியும் என்று கூறியிருந்தார்.