Home One Line P1 வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் அளித்த ஆடவர் கைது!

வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் அளித்த ஆடவர் கைது!

500
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வழக்கறிஞரான ஷாரெட்சான் ஜோஹானின் தலையைத் துண்டித்து, கொலை செய்வதாக அச்சுறுத்திய நபர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பிரிவு 506-இன் கீழ், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

காவல் துறையினரின் விரைவான நடவடிக்கைக்கு ஷாரெட்சான் தமது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

ஜாகிர் நாயக்கின் நிரந்தர குடியுரிமையை திரும்பப் பெறுமாறு கோரிய பின்னர் புதன்கிழமை இரவு ஷாரெட்சான் இந்த அச்சுறுத்தலைப் பெற்றார்.