Home One Line P1 பாஸ்- அம்னோ: தேசிய உம்மா ஒருங்கிணைப்பு சாசனத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு 10,000 பேர் கூடுவர்!

பாஸ்- அம்னோ: தேசிய உம்மா ஒருங்கிணைப்பு சாசனத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு 10,000 பேர் கூடுவர்!

622
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி இரு முக்கிய மலாய் கட்சிகளான அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான தேசிய உம்மா ஒருங்கிணைப்பு சாசனத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு 10,000 உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று அம்னோ மற்றும் பாஸ் இலக்கு வைத்துள்ளதாக அம்னோவின் பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் மக்களுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய மாற்றாக இருக்கும் என்று அம்னோ அனுவார் மூசா கூறினார்.

இந்த கூட்டத்தில் மசீச மற்றும் மஇகா கட்சிகளுடன் பிற கூறு கட்சிகளும் கலந்துக் கொள்ள உள்ளன.