Home One Line P1 ஜாகிர் ஆபத்தானவர், வன்முறை வெடிப்பதற்குள் நாடு கடத்துங்கள்!- தௌபிக்

ஜாகிர் ஆபத்தானவர், வன்முறை வெடிப்பதற்குள் நாடு கடத்துங்கள்!- தௌபிக்

953
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் ஜாகிர் நாயக் தனது இனரீதியான குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்பது மட்டும் போதாது, அவர் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று வழக்கறிஞர் முகமட் தௌபிக் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த போதகர் நாடு கடத்தப்படுவதற்கான நேரம் இது என்று அவர் குறிப்பிட்டார்.

அவரது பேச்சுக்களால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய அச்சுறுத்தல் அனைத்து பழமைவாத முஸ்லிம்களையும், சாத்தியமான பயங்கரவாதிகளாக பார்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது. மேலும், பழமைவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மன்னிப்பு போதாது. அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ”என்று அவர் நேற்று செவ்வாய்க்கிழமை கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணைப் பிரதமர் துன் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானின் மகனுமான முகமட் தௌபிக், ஜாகிரின் குற்றச்செயல்கள் கொண்ட பெயர்கள், அவர் எங்கு சென்றாலும் அவருக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“அண்மையில் வங்காளதேசத்தில் பயங்கரவாத செயல்களைச் செய்ய அவர் ஒரு நபரை ஊக்கப்படுத்தியதாக செய்திகள் வந்துள்ளன, மேலும் ஜோகூரில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒருவர் மரண அச்சுறுத்தல் கொடுத்துள்ளார். ஜாகிர் ஆபத்தானவர்.  என்று தௌபிக் கூறினார்.

அவரை வெறித்தனமான பின்பற்றுபவர்கள் உள்ளனர். அவர்கள் அவர் சார்பாக வன்முறையைச் செய்வார்கள்,” என்று அவர் கூறினார்.