Home One Line P1 மக்கள் ஓசை ஏற்பாட்டில் ஆசான்ஜியின் ஆன்மீக உரை

மக்கள் ஓசை ஏற்பாட்டில் ஆசான்ஜியின் ஆன்மீக உரை

1302
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அண்மையக் காலமாக தனது ஆன்மீக உரைகளால் பலரையும் கவர்ந்து வரும் மதிப்பிற்குரிய ஆசான்ஜி அவர்களின் ஆன்மீக உரை நாளை புதன்கிழமை செப்டம்பர் 4-ஆம் தேதி மாலை 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டர் மண்டபத்தில் நடைபெறும்.

மக்கள் ஓசை தமிழ் நாளிதழின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

18 வயதுக்கும் மேற்பட்டோர் மட்டுமே இந்த ஆன்மீக உரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட இடங்களே உள்ளபடியால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் முன்கூட்டியே மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.